கடந்தாண்டில் சொன்ன ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

கடந்தாண்டில் சொன்ன ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டில் அறிவித்த ஒரு திட்டத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார்.  

சட்டப்பேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், கைத்தறித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா, நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை வரவேற்பதாக கூறினார். 

இதையும் படிக்க : சிவகங்கையில் வினோத வழிபாடு... 200 ஆண்டுகளாக மாறாத அதே பாரம்பரியம்...!

தொடர்ந்து பேசிய அவர், 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லா வேட்டி சேலை அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும்,  மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும், மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி என கடந்த ஆண்டு அறிவித்த திட்டங்களில் ஒன்றைக்கூட திமுக அரசு செயல்படுத்த வில்லை என அடுக்கடுக்கான குற்றம்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.