14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அரசு அனுமதி !!!!!

14 வயது சிறுமியின் 24 வார கருவை கலைக்க அரசு  அனுமதி !!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் 14 வயது மகளுக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் உறவுக்கார இளைஞன் தவறாக நடந்து கொண்டதும், வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டியதும் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட இளைஞர் மீது செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதியபட்டுள்ள நிலையில், கர்ப்பத்தை தொடர்ந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருக்கலைப்பு சட்டக் குழு அறிக்கை அளித்துள்ளது.

மேலும் படிக்க| இணைய வழிச் சேவைகள்... ! இந்தியன் வங்கியுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்...!!

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறுமியின் தந்தை தாகல் செய்துள்ள வழக்கில், தனது மகள் படிப்பை தொடர விரும்புவதாகவும், தற்போதைய நிலையில் கர்ப்பத்தை சுமக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், மகளின் 24 வார கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, தொடர்ந்து கருவை சுமந்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என கருக்கலைப்பு சட்டக் குழு ஆளித்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, 2 வாரங்களில் சிறுமியின் கருவை கலைக்க திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு அனுமதியளித்து, வழக்கை முடித்துவைத்துள்ளார்.

மேலும் படிக்க | ஏரிகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம் - அமைச்சர் பதில்!