உறுப்பினர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!

உறுப்பினர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உறுதி!

சேலம் மூங்கப்பாடி மகளிர் பள்ளியில் உறுப்பினர் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய சேலம் தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சேலம் மாநகராட்சி மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க : 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு.... அதிமுக – திமுக இடையே காரசார விவாதம்!!!

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,  உறுப்பினர் குறிப்பிட்ட பள்ளியில், 2ஆயிரத்து, 66 மாணவியர் பயின்று வருகின்றனர் என்றும், இதில் முதற்கட்டமாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டிலும் 6 வகுப்பறைகள் கட்டப்படும் என்றும், உறுப்பினர்  எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.