நடிகை விஜயலட்சுமி புகார்; சீமானுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்!

நடிகை விஜயலட்சுமி புகார்; சீமானுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்!

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாா் தொடா்பாக நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி போலீசாா் சம்மன் அனுப்பியுள்ளனா். 

கடந்த 2011-ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது புகாா் அளித்தாா். அதன்போில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விஜயலட்சுமியிடம் போலீசாா் தீவிர விசாரணை நடத்தினா். 

இதற்கிடையே இது தொடா்பாக விசாரணை நடத்தக்கோாி விஜயலட்சுமி  சமீபத்தில் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்போில் அவா் காவல் துணை ஆணையா் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானாா். அவாிடம் போலீசாா் சுமாா் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மேலும் விஜயலட்சுமி அளித்த புகாரின் போில் சீமான் மீது நான்கு பிாிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சீமான் இன்று காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசாா் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனா்.

இதையும் படிக்க:பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடன் சந்திப்பு!