மது அருந்த சிறப்பு உரிமம்.... திருத்தப்பட்ட அரசாணை!!

மது அருந்த சிறப்பு உரிமம்.... திருத்தப்பட்ட அரசாணை!!

விருந்துகள், விழாக்கள் போன்றவற்றில் மதுபானம் பரிமாறுவதற்கான சிறப்பு உரிமத்தை ரத்து செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

வணிக வளாகங்களில் நடைபெறும் தேசிய, பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகளில் மதுபானம் பரிமாறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும் பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  

மேலும் தெரிந்துகொள்க:  இனி இங்கும் அனுமதி பெற்று மது அருந்தலாம்... !!!

இந்நிலையில், மதுபான உரிமம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிப்பு எழுந்ததன் அடிப்படையில், சிறப்பு உரிமத்தை ரத்து செய்து, திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்துகொள்க:  அனுமதி பெற்றாலும் மது அருந்த அனுமதி இல்லை.... செந்தில் பாலாஜி!!