1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு ..!

1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு ..!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ‌அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக  தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் யார் யாருக்கு இத்தொகை வழங்குவது என்பது தொடர்பாக அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையி்ல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் மகளிர் உரிமைத்தொகைக்கான சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்திட்டத்திற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 1 கோடி பேருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி,  இத்திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

மேலும், மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு “ கலைஞர்  மகளிர் உரிமை தொகை திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.      

இதையும் படிக்க   | 10,000 பணியிடத்தை நிரப்ப வேண்டும்; அதுதான் முதல்வர் டிஐஜிக்கு செய்யும் மரியாதை..!” -அண்ணாமலை.