சோதனையில் சிக்கிய கணக்கில் காட்டாத பொருள்....!!

சோதனையில் சிக்கிய கணக்கில் காட்டாத பொருள்....!!

எட்டு கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்கத்தை  போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த காவேரி ட்ரான்ஸ்போர்ட் என்கிற தனியார் ஆம்னி பேருந்தில் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் கணக்கில் காட்ட முடியாத 14.5 கிலோ தங்கம் இருந்துள்ளது.  விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் எந்த விதமான ஆவணங்கள் இன்றி கொண்டு வந்தது தெரிய வந்தது.

கோயம்புத்தூர் ஜுவல்லர்ஸ் என்கிற நிறுவனத்தில் சரவணன் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து தங்கத்தை எந்தவித ஆவணமும் இல்லாமல் எடுத்து வந்துள்ளார்.  போதைப்பொருள் தடுத்த பிறகு அதிகாரிகள் இந்த தங்கத்தை வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க உள்ளனர்.

இதையும் படிக்க:   காலமானார் பிரபல நாட்டுப்புற பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள்....!