“எதிர்த்து வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்....” வைகோ!!

“எதிர்த்து வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்....” வைகோ!!

கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் தன்னை சுற்றி நின்று ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு எதிராக அல்லாஹு அக்பர் என முழக்கமிட்ட, முஸ்கானைப் போல் எதையும் எதிர்க்க வேண்டும் என்கிற தைரியத்தோடு இந்து மதவாத சக்திகளை எதிர்த்து வீழ்த்தி வெற்றி பெற வேண்டும்.

நோன்பு திறக்கும் நிகழ்ச்சி:

மதிமுக சிறுபான்மையினர் அணி சார்பாக சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ரமலான் மாத இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி உள்ளிட்டோ பங்கேற்று நோன்பு திறந்தனர்.  இந்நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்று ரமலான் மாத நோன்பை திறந்தனர்.

சிறுபான்மையினர் விழா:

உலகெங்கும் ஈஸ்டர், இப்தார் நிகழ்ச்சிகள் ஒரே நாளில் நடைபெறுகிறது எனவும் சிலுவையில் அறைந்து ரத்தம் சொட்ட 3ம் நாளில் இயேசு உரிதெழுந்ததையொட்டி ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது எனவும் கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறுபான்மை மக்களான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் கொண்டாடும் நாள் எனவும் கூறியுள்ளார்.

துன்புறுத்தப்படும் இஸ்லாம்:

ரத்தம் சிந்தி நிலைநிறுத்தப்பட்ட இஸ்லாம், இன்றைக்கும் ரத்தம் சிந்தும் நிலையில் இல்லை எனவும் ஆனால், இஸ்லாமியர்களை தூண்டிவிடும் வகையில் மதவாத சக்திகள் செயல்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் இஸ்லாம் மக்கள் எவ்வளவு துன்பப்படுத்த முடியுமோ அவ்வளவு துன்பப்படுத்தப்படுகிறார்கள் எனவும் கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு தடை விதிக்கிறார்கள் எனவும் அதனையும் மீறி ஹிஜாப் அணிந்துக் கொண்டு வந்த பெண்ணை சூழ்ந்து கொண்டு இந்து ராஷ்டிரம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள்  ஜெய்ஸ்ரீராம் என கத்தினார்கள் எனக் கூறிய வைகோ அதனை எதிர்த்து முஸ்கான் என்ற இளம்பெண் அல்லாஹு அக்பர் என முழக்கமிட்டார் எனவும் பேசியுள்ளார்.

முஸ்கானைப் போல் எதையும் எதிர்க்க வேண்டும் என்கிற தைரியத்தோடு இந்து மதவாத சக்திகளை எதிர்த்து வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:   “இத்தகைய நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்....” துரை வைகோ!!