இந்தியாவிலேயே முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு...! சென்னையில் இன்று தொடக்கம்...!!

இந்தியாவிலேயே முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாடு...! சென்னையில் இன்று தொடக்கம்...!!

தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை சார்பில் முதல் முறையாக நடைபெறும் "தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டினை" சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், சிறப்பு மாநாடு சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதை செயல்படுத்தும் விதமாக தமிழகத்தின் சார்பில் 2 நாள் மருத்துவச் சுற்றுலா மாநாடு, சென்னையில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தின் சார்பில் மருத்துவச் சுற்றுலாவுக்காக முதல்முறையாக மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. குறைந்த செலவில் தரமான மருத்துவச் சேவை வழங்கப்படுவதால் பல்வேறு வெளிநாடுகளின் சுகாதாரத் தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழகம் விளங்குகிறது. எனினும், இடைத்தரகர்களின் இடையூறுகளால் சிறந்த சேவையை பயனாளிகள் பெற முடியாத சூழல் நிலவுகிறது. அதை தவிர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த மாநாட்டு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சவுதி அரேபியா, மொரீஷியஸ் உட்பட 20 நாடுகளில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் சிறந்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள், அயலக தூதரக அதிகாரிகள், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் -சிறப்பு பார்வை...!!