ஆடியோவில் ஆவேசமான சசிகலா... செய்வதறியாது திகைத்து நிற்கும் இ.பி.எஸ்!!

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

ஆடியோவில் ஆவேசமான சசிகலா... செய்வதறியாது திகைத்து நிற்கும் இ.பி.எஸ்!!

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகியுடன் சசிகலா பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

சசிகலா கடந்த சில மாதங்களாக அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் செல்போன் மூலம் பேசி வருகிறார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அதிமுகவினர் யாரும் சசிகலாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்று கட்சி உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் சசிகலாவுடன் பேசும் அதிமுக பிரமுகர்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டும் வருகின்றனர்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகி சுரேஷ் மற்றும் சசிகலா ஆகியோர் பேசும் ஆடியோவில், கட்சியை சரி செய்ய வேண்டும் சீக்கிரம் வருவேன்.தொண்டர்கள் தான் கட்சி. சாதி,மத, பேதம் இல்லாமல் தான் இரண்டு தலைவர்களும் கட்சியை கொண்டு சென்றனர். அதேபோல கட்சியை நிச்சயம் கொண்டு செல்வேன் எனவும், கொங்கு மண்டலத்தில் இருப்பவர்கள் கட்சிக்காக ஓட்டு போட்டுள்ளனர். ஒருவர் இருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த நபர்களையும் குறைச் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தொண்டர்கள் தான் எல்லாமே. தொண்டர்கள் எல்லாம் என் கூட தான் இருக்கீங்க. நிச்சயம் நாம இதுலயும் வெற்றிய பறை சாற்றுவோம். மக்களுக்கு நல்லது செய்யணும். உள்ளன்போடு செய்யணும். விரைவில் சந்திப்போம். நல்லது. இவ்வாறு சசிகலா பேசியுள்ளார்.