மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்...

அடேங்கப்பா...இவ்வளவு கோடியா..!!

மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்...

சினிமா என்பது கோடியில் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு துறையாக பரவலாக பார்க்கப்படுகிறது. தனக்கு கிடைக்கும் பேர் புகழைவிட கிடைக்கப்பெறும் பணத்திற்காக தான் பலர் சினிமா மோகம்கொண்டு சென்னையை நோக்கி பயணிக்கின்றனர். ஆனால் சினிமாத்துறையில் சாதிப்பதற்கும், சம்பாதிப்பதற்கும் திறமையை தாண்டி பணபலம் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படி பணபலம் இன்றி படைபலம் இன்றி சினிமாத்துறையில் சாதித்தவர்கள் வெகுசிலரே. பெரும்பாலானோர் வலிமையான பின்புலத்துடன் தான் சினிமாத்துறையில் நுழைகின்றனர்.

சமீபத்தில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்துவரும் இளைஞர்களின் கனவுகன்னியான மாளவிகா மோகனனின் சொத்துமதிப்பு வெளியாகி ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை மாளவிகா மோகனன் 1992 ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை யூ.கே மோகனன் என்பவர் பல பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதனால், தனது பள்ளி மற்றும் கல்லூரி காலம் முழுவதும் மும்பையிலேயே கழித்தார். அதனை தொடர்ந்து மாடலிங்கில் தனக்கு இருந்த ஆர்வத்தினால் சர்வதேச அளவிலான பல ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்றார். அதில் தனக்கு கிடைத்த அங்கீகாரத்தினால் 2013 ஆம் ஆண்டு துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் கால்பதித்தார்.

அதையடுத்து, பகத் பாசிலுக்கு ஜோடியாக நலே படத்தில் பழங்குடியினப் பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியாக சில மலையாளத் திரைப்படங்களில் நடித்த மாளவிகா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரஜினியின் பேட்ட படத்தில் பூங்கொடியாக அறிமுகமானார். திரைப்படத்தில் மிக குறைந்த காட்சியே வந்திருந்தாலும் மிகுந்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அதனை தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் பல வகையில் விதவிதமாக ஆடைகளை அணிந்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து பதிவிட்டு வந்தார். இதனால் இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலாமாகி விஜயின் மாஸ்டர் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.

மாஸ்டரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் மாறன் திரைப்படத்திலும்  தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா தான் நடித்துவருகிறார். சமீபத்தில் மாறன் படத்தின் போஸ்டரில் சிவப்பு நிற கவுன் அணிந்து கொண்டு தனுஷுடன் இணைந்து நடந்துவரும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இப்படி தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழியில் பிசியாக படங்களில் நடித்துவரும் மாளவிகா மோகனனின் சொத்துமதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

இவர் கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை  வைத்துள்ளார். இதன் மதிப்பே கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும், அத்துடன் வெள்ளை நிறத்தில் பேன்ஸ் எஸ் கிளாஸ் மாடல் கார் வைத்துள்ளார், இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒன்றரை கோடிக்கு மேலாகும் என்றும் தகவல் வந்துள்ளது. தற்போது குடும்பத்துடன் பூர்வீகமான கேரளாவின் பையூரில் வசித்து வரும் இவருக்கு மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்றும் சொந்தமாக உள்ளது என்று தெரிகிறது. திரைத்துறைக்கு வந்து பத்து வருடம் கூட முழுசாக ஆகாத நிலையில் 7 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து வைத்துவிட்டார் என்று பலர் இவர் மீது பொறாமை கொள்கிறார்களாம். ஆனால், இவரின் தந்தை முப்பது ஆண்டுகளாக ஹிந்தி, மலையாளம் என்று பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி ஏறக்குறைய 67 கோடி சொத்து சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்னரே இவர்களிடம் பூர்விக சொத்து பல கோடிக்கு இருந்ததாகவும் திரைத்துறை அதனை இருமடங்காக பெருக்குவதற்கு உபயோகப்பட்டதாகவும் தான் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும் கோடீஸ்வர நாயகிகளில் மிக முக்கியமான நடிகையாக வலம்வரும் மாளவிகா மோகனன் பெரிதாக எந்த ஒரு சிரமத்தையும் பார்க்காமல் எடுத்தயெடுப்பில் உச்சத்தை தொட்டுவிட்டார் என்றும் இவரின் பயணத்திற்கு பின்பு இருக்கும் கடினத்தை கணக்கில் கொள்ளாமல் பலரும் இவர் மீது வன்மத்தை பொழிந்து வருகின்றனர்.