நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் வணிக வரித்துறைக்கு உத்தரவு!

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் வணிக வரித்துறைக்கு உத்தரவு!

நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்குமுன் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது எனவும், 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்கவில்லை என்றால் அவராதம் விதிக்கலாம் என்றும் வணிக வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு:

நடிகர் விஜய், கடந்த 2005ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ. எக்ஸ்5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது  என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து விஜய் தரப்பில் ரூ.7,98,075 நுழைவு வரி செலுத்தப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்:

இந்நிலையில் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக  ரூ.30,23,609 செலுத்த வேண்டுமென கடந்த  2021 ஆம் ஆண்டு டிசம்பர் 17ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்நிலையில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவோடு, இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த மனுக்களும்  சேர்த்து நீதிபதி சுரேஷ்குமார் முன்பு இன்று  விசாரணை நடைபெற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு:

அப்போது இறக்குமதி கார்களுக்கு நுழைவுவரி செலுத்த வேண்டியது கட்டாயம் என ஹாரீஸ் ஜெயராஜுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து, நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன் நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்கக் கூடாது எனவும் , 2019 ஜனவரிக்கு பின்பு நுழைவுவரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் வணிகவரித்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து விஜய், ஹாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரணையில் முடித்து வைத்தது.