பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்த இளம்பெண்... விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பல்!

தூத்துக்கூடியில் பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்ணை கடத்தில் மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்த இளம்பெண்... விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பல்!

தூத்துக்கூடியில் பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய இளம்பெண்ணை கடத்தில் மதுரையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரத் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், ஆள்கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன், குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு போலீசார் வாடிக்கையாளர் போன்று சென்றுள்ளனர். அப்போது, அந்த வீட்டில் இருந்த இரு பெண்கள் உட்பட 5 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில் இவர்களது கூட்டணியில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் இருப்பதை அறிந்த போலீசார் அப்பெண்ணிடம் விசாரித்தனர். விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஜோதி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி மதுரைக்கு வந்துள்ளார். அப்போது அவரை கடத்தில் ஒரு கும்பல் அவரை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடவைத்தது அம்பலமானது. தொடர்ந்து அவரை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியில் வரும் இளம் பெண்களை குறிவைத்து கடத்தும் நபர்களிடம் இருந்து பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.