எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : கோத்தபயவிற்கு சிங்கப்பூர் அரசாங்கம் கடிதம்!

எங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் : கோத்தபயவிற்கு சிங்கப்பூர் அரசாங்கம் கடிதம்!

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு  சிங்கப்பூர் அரசாங்கம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி

ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலைக்காக ஆயுதங்கள் மற்றும் போர்த் தளவாடங்கள் வாங்கியதால் அந்நாட்டு பொருளாதாரம் பாதிப்படைந்தது. இலங்கையின் பொருளாதாரம் சீரழிந்ததால் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். 

மாலத்தீவிலிருந்து வெளியேறிய கோத்தபய

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பினால் இதற்கு பயந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமறைவாக இருந்து வந்தார். போராட்டம் தீவிரமடைந்ததால் கோத்தபய மாலத்தீவிற்கு தப்பியோடினார். எனினும், கோத்தபய ராஜபக்சவை நாட்டைவிட்டு வெளியேற்றுமாறு மாலத்தீவு மக்களாலும், அங்கு வாழும் இலங்கையர்களாலும் மாலத்தீவு அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சவூதி அரேபிய விமானச் சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் சிங்கப்பூர் சென்றார்.

 சிங்கப்பூரிலிருந்து வெளியேற உத்தரவு

கோத்தபய ராஜபக்ச, அவரது மனைவி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 15 நாட்களுக்கு மட்டுமே நாட்டில் தங்க சிங்கப்பூர் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த கால அவகாசம் முடிவடைந்த பின்னர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு  கோத்தபய ராஜபக்சவிற்கு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விசா காலம் நீடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.