உதயநிதியை முன்னிலைப்படுத்தும் துர்கா..! மகனா? மருமகனா? விழிப்பிதுங்கும் ஸ்டாலின்..

மகனுக்கா மருமகனை விட்டுக் கொடுக்க முடியாத ஸ்டாலின்..!

உதயநிதியை முன்னிலைப்படுத்தும் துர்கா..! மகனா? மருமகனா? விழிப்பிதுங்கும் ஸ்டாலின்..

உதயநிதி கட்சிக்கு வரும் முன்னரே மருமகன் சபரீசன் தான் கட்சியையும், கலைஞருக்கு பிறகு ஸ்டானுக்கு அனைத்து விதத்திலும் ஆலோசனைகளை வழங்கி வந்தது நாம் அறிந்ததே. ஆனால் தற்போது உதயநிதி கட்சிக்குள் வந்தது மட்டுமல்லாது எம்.எல்.ஏவும் ஆனதால் அவரிடம் அனைத்தையும் ஒப்படைக்கும் படி துர்கா ஆர்டர் செய்து வருவது ஸ்டாலினை விழிபிதுங்க வைத்திருக்கிறது.

டெல்லி செல்லும் போது கூட சபரீசனை உடன் அழைத்து செல்ல வேண்டும் என்று தான் ஸ்டாலின் ஆசைப்பட்ட நிலையில், துர்கா நமது அடுத்த வாரிசான உதயநிதியை தான் அழைத்து செல்ல வேண்டும் என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரில் ஒருவரை அழைத்து சென்றால் மற்றொருவருக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதால் இருவரையும் விட்டு விட்டு துர்காவை மட்டும் உடன் அழைத்து சென்றார் ஸ்டாலின். 

அங்கு டெல்லி தொடர்புகளை எல்லாம் மாப்பிள்ளைதான் கவனித்து வருகிறார் என ஸ்டாலின் எதார்த்தமாக கூற, முகம் சிவந்து ஏன் உதயநிதிக்கு ராகுல் காந்தியிடம் பேசத் தெரியாதா என கொந்தளித்துள்ளார் துர்கா. மீண்டும் சென்னை திரும்பியதும் இனி கட்சியில் அடுத்த வாரிசி உதயநிதி தான் என்பதால் அனைவரும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என துர்கா ஆணையிட என்ன செய்வதென்று தெரியாமலும், மறுப்பு சொல்ல முடியாமலும் திணறி வருகிறார் ஸ்டாலின். 

இப்படி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள், சொந்தக் கட்சியினரின் உட்கட்சி பூசல், உள்ளாட்சி தேர்தல், வாரியத்திற்கு சண்டையிட்டுக் கொள்ளும் சீனியர்கள், குடும்பப் பஞ்சாயத்து என அனைத்து பக்கத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு.