பப்ஸில் கரப்பான் பூச்சி இருந்ததால் ரூ.10,000 அபராதம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பேக்கரியில் பப்சில் கரப்பான் பூச்சி இருந்ததால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சிவகாசி பைபாஸ் சாலையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் பப்ஸ் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், பப்ஸை சாப்பிடுவதற்காக உடைத்த போது, கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததைப் பார்த்து திரும்பி வந்து காட்டியுள்ளார். அவரை சமாதானப்படுத்திய கடைக்காரர்கள் வேறு ஒரு பப்ஸ் வழங்கியுள்ளனர்.  

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் , ஆய்வு நடத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குறைகளை சுட்டிக் காட்டி நோட்டீஸ் வழங்கியதோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.