12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. தேர்வு முடிவுக்கு பயந்து தற்கொலையா என விசாரணை

நாளை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வர உள்ள நிலையில் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு  மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.

12 ஆம் வகுப்பு  மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. தேர்வு முடிவுக்கு  பயந்து தற்கொலையா என விசாரணை

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் குமரவேல், கூலி தொழிலாளியான இவரது மகன் விக்னேஷ் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது விக்னேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் விக்கேன்ஷ் எந்நேரமும் செல்போஃனும் கையுமாக இருந்ததாகவும் இதனால் தந்தை குமரவேல் விக்னேஷை திட்டியதால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பயத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.