12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்,.. சம்பவம் அறிந்து நண்பரும் சீரழித்த கொடுமை.! 

12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்,.. சம்பவம் அறிந்து நண்பரும் சீரழித்த கொடுமை.! 

திருவண்ணாமலை அடுத்த தென்கரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் 12 வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே அதே கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 27)  என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மகேந்திரன் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை சொல்லி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து மகேந்திரன் தன்னுடைய நண்பர் வெங்கடேசனிடமும் தெரிவித்துள்ளார்.


இதன் பின்னர் அந்த மாணவியை சந்தித்த மகேந்திரனின் நண்பர் வெங்கடேசன் (வயது 23), இந்த விஷயம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்றால் நான் சொல்லுவதை கேளு என்று கூறி அந்த மாணவியை கட்டாயப்படுத்தி  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த மாணவி கர்ப்பமடைய, மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக்கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார். 


இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்தநிலையில் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசில் புகார் அடிப்படையில் போக்கோ சட்டத்தின்கீழ் மகேந்திரன் 
,வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.