நீதிமன்ற வளாகத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு...வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

நீதிமன்ற வளாகத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு...வெளியான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

கோவை நீதிமன்ற வளாகத்தில், 2 பேரை மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்நிலையில், குற்ற வழக்கு தொடர்பாக கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அவர்களை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதையும் படிக்க : வரும் பிப்ரவரி 17... நேருக்கு நேர் மோதும் தனுஷ் - செல்வராகவன்...!

இதில் கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மனோஜ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப் பகலில், நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த கொலை சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இச்சம்பவம் குறித்து, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.