பெரம்பலூரில் வழிப்பறி திருடன் 2 பேர் கைது..!

பெரம்பலூரில் வழிப்பறி திருடன் 2 பேர் கைது..!

பெரம்பலூர் ரோவர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரபு (41). இவர் பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று காலை 9.30 மணியளவில் கடையை திறக்க டூவிலரில் எளம்பலூர் சாலை வழியே வந்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த இரண்டு பேர் பிரபுவை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி அவரது பையிலிருந்த ரூ.500 பணம், செல்போனை மற்றும் டூவிலரையும் பறித்துக்கொண்டு அதிவேகமாக சென்று தப்பினர்.

இது குறித்த தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று டூவிலரை சென்ற வழிப்பறி திருடர்களை பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்த விஜயேந்திரன் மகன் ஹரிஹரன் (47), சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகா, முண்டலாம்பட்டியை சேர்ந்த ராமன் மகன் ரமேஷ் (எ) கருணாகரன் (40) என்பதும் தெரியவந்தது. 

இதையடுத்து ஒரு டூவிலர், ஒரு செல்போன், ரூ. 500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 டூவிலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து ஹரிஹரன், கருணாகரன் ஆகியோரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.