ஆடு வியாபாரியை கடத்தி 25 லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

ஆடு வியாபாரியை கடத்தி 25 லட்சம் பறிப்பு; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

ஒசூர் அருகே ஆடுகளை விற்பனை செய்யும் மொத்த வியாபாரியை காரில் கடத்திச் சென்று 25 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தலைமறைவான நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த புலியனேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி வந்து, கிருஷ்ணகிரி வாரச் சந்தைகளில் விற்பனை செய்து வருகிறார்.

சுமார் 20 ஆண்டுகளாக ஆடு விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், வழக்கம்போல் ஆடு விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு ஒசூர் அடுத்த பத்தளப்பள்ளி பகுதியில் நடந்து வந்துள்ளார். அப்போது, நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த 4 பேர், சரவணனை குண்டுக்கட்டாக காரில் கடத்திச் சென்றனர். அவர் வைத்திருந்த 25 லட்சம் ரூபாய் பணத்த பறித்துக்கொண்ட அந்த கும்பல், உத்தனப்பள்ளி அடுத்த அகரம் என்னுமிடத்தில் இறக்கிவிட்டு பணத்துடன் தலைமறைவாகி உள்ளது.

இதுகுறித்து ஆட்டு வியாபாரி சரவணன் அளித்த புகாரை அடுத்து, கடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிக்க:"காங்கிரஸ் குறித்து பேசுவதற்கு அமித்ஷாவிற்கு தகுதியில்லை" மாணிக்கம் தாகூர் எம்.பி. காட்டம் !