கறி கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 3 ரவுடிகள் கைது!!

வியாசர்பாடியில் கறி கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

கறி கடைக்காரரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 3 ரவுடிகள் கைது!!

சென்னை வியாசர்பாடி மல்லிப்பூ காலனி பகுதியை சேர்ந்தவர் அசிம். இவர் அதே பகுதியில் கறிகடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடைக்கு தேவையான கோழிகறிகளை வாங்கிக்கொண்டு வியாசர்பாடி ராமலிங்க கோவில் அருகே வரும் போது, மூன்று இளைஞர்கள் அசிமை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அசிம் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார்  திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த சூரியபிரகாஷ்  வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சஞ்சய்  கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல்  ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.