30 வயது பெண்ணைக் கூட்டுப் பாலியல் செய்த 4 பேர் கைது:

புது டெல்லி ரயில் நிலையத்தில், ஒரு பெண்ணை நான்கு ரயில்வே ஊழியர்கள் கூட்டுப் பாலியல் செய்துள்ளனர். இதனால், தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

30 வயது பெண்ணைக் கூட்டுப் பாலியல் செய்த 4 பேர் கைது:

புது டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஒரு 30 வயது பெண்னை, ரயில் நிலையத்திலேயே வைத்து ஊழியர்கள் கூட்டுப் பாலியல் செய்ததாக, புகார் எழுந்த நிலையில், இன்று நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்குப் பதிவு செய்த பாதிக்கப்பட்ட பெண், அதிகாலை போலீசாருக்கு போன் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, ரயில் விளக்கு குடிலில் இன்ஹ கொடூர சம்பவம் நடந்ததாகவும், இரண்டு ஆண்கள் அவரைக் கூட்டுப் பாலியல் செய்ததாகவும், அதற்கு இருவர் வாயிலில் காவலுக்கு இருந்ததாகவும் புகார் தெரிவிக்கிறது. 

புது டெல்லி ரயில் நிலையத்தின் 8-9 நடைமேடைகளில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண், ஃபரீதாபாத் பகுதியைச் சேர்ந்தவராகக் கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர குமார் சிங், “பொதுவான ஒரு நண்பர் மூலம், இரண்டு வருடங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபரைத் தெரிந்துக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார்” எனக் கூறினார்.

தனக்கு, ஒரு வேலை வாங்கித் தருவதாக வாக்களித்ததாகவும், நேற்று, தனது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்க் கூறி ரயில் நிலையத்திற்கு அழைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக டிசிபி ஹரேந்தர் கூறினார். அப்படி, கடந்த வெள்ளிக்கிழமை (22. 07.2022) அன்று கீர்தி நகர் ரயில் நிலையத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டப்பட்டவர் மின்சாரக் குடிலுக்கு இழுத்துச் சென்று இன்னொருவருடன் கூட்டுப் பாலியல் செய்ததாகவும், இருவர் வாயிலி காவலுக்கு இருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், சதிஷ் குமார் (35), வினோத் குமார் (38), மங்கள் சந்த் மீனா (33) மற்றும் ஜகதீஷ் சந்த் (37) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இவர்கள் மின்சாரத் துறையில் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட நிலையில், நான்கு பேரும், டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். பின், 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.