5 வயது சிறுவனை அடித்தும், சூடு வைத்தும் கொன்ற கொடூர பெண்…  

தாம்பரம் அருகே 5 வயது சிறுவனை அடித்து கொலை செய்த கொடூர  பெண்ணை போலீசார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

5 வயது சிறுவனை அடித்தும், சூடு வைத்தும் கொன்ற கொடூர பெண்…   

சென்னை தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்,சூசைமேரி தம்பதியரின்  5-வயது மகன் ஆபேல். இந்த நிலையில் தியாகராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்,சூசை மேரியும் தினமும் கூலி வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதனால் பீர்க்கண்காரணை வேல் நகர்,எம்ஜிஆர் தெருவில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு நான்கு மாதத்துக்கு முன் சிறுவன் ஆபேலை  அனுப்பியுள்ளார். நான்கு மாதம் சிறுவன் இந்த வீட்டில் வளர்ந்து வருகிறான்.

இந்த நிலையில் சூசை மேரியின் சகோதரி இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் அவரது மகள் (20) வயதுடைய மேரி சிறுவன் ஆபேலை கவனித்து வந்துள்ளார். நேற்று சிறுவன் ஆபேல் திடீரென மயக்கம் அடைந்ததாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்தபோது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த  பீர்க்கன்காரணை போலீசார்  விரைந்து சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சிறுவனின் கை கால் முகம் உட்பட உடல் முழுவதும்  தீ  காயங்கள், அடித்த அடையாளங்கள் இருந்துள்ளன. இதை கண்ட போலீசார் அதிர்ச்சி அடந்தனர். இதனால் சட்ட ஒழுங்கு  காவல் ஆய்வாளர் விஜயகுமார்   விசாரணையை தீவிரப்படுத்தினார்.

இதையடுத்து குழந்தையை கவனித்து வந்த மேரி என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது   கடந்த நான்கு மாதமாக வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுவன் ஆபேலை அடித்து துன்புறுத்தியதாக வாக்கு மூலம் அளித்தாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு சிறுவனை அடித்தபோது தலையில் அடிப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக  விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கொடூர பெண் மேரி மீது கொலை  வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.