போதைப்பொருள் கடத்தல்...! நைஜீரியா நாட்டவருக்கு 5 ஆண்டு சிறை...!!

போதைப்பொருள் கடத்தல்...! நைஜீரியா நாட்டவருக்கு 5 ஆண்டு சிறை...!!

கொகைன், ஹெராயின், கஞ்சா கடத்தல் வழக்கில் நைஜீரியா நாட்டை சேர்ந்தவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையை அடுத்த நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனத்தில் நைஜீரியா நாட்டை சேர்ந்த காட்வின் என்பவர் வந்து கொண்டிருந்தார்.

அவரது இரு சக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்த போலீசார், காட்வினிடமிருந்து 130 கிராம் கொகைன், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஏழு கிராம் ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

இதுசம்பந்தமான வழக்கை விசாரித்த போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, காட்வினுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அறுபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிக்க:தன்னையே கேலி செய்தாலும், மக்களை மகிழ்வித்த மனோபாலா...!!