வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை ...

காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை ...

காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பாரத். இவர் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே நிறுவனத்தில் பணி புரிந்து வந்த வினோதா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தற்போது வினோதா 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். மதுவிற்கு அடிமையான பாரத் தினமும் குடித்துவிட்டு வினோதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பாரத் தாய் மற்றும் சகோதரியுடன் சேர்ந்து வினோதாவிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த வினோதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த வினோதாவின் பெற்றோர் பாரத் அவருடைய தாய் மற்றும் சகோதரி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பாரத் மற்றும் அவருடைய தாய் ஜோதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாரத்தின் சகோதரி பரிமளாவை தேடிவருகின்றனர்.