நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம், ரூ.7 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு...7 பேர் கைது

கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

நகை வியாபாரியிடம் 2 கிலோ தங்கம்,  ரூ.7 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு...7 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தை சேர்நதவர் சண்முகம், நகை வியாபாரியான, இவர் சக்தியமங்கலத்தில் இருந்து தங்க நகைகளை வாங்கி, அதை ஹால்மார்க் நகையாக மாற்ற 2 கிலோ மற்றும் 7 லட்சம் பணத்துடன் கடந்த 30-ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வடவள்ளி வந்துள்ளார். 

அப்போது வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் வந்த  அவரை வழிமறித்த இரண்டு மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சம் பணத்தை அபகரித்து சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.  இந்நிலையில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில்   அப்துல் ஹக்கீம், அஸ்ரப் அலி, பவானி, வெங்கடாச்சலம், பவர் சிங், தினேஷ் ராவல், ரஞ்சித் சிங் ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.