செங்கல்பட்டு: மின்சார ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை!!

சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு: மின்சார ரயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்தவர் மாரிமுத்து. கூலி தொழிலாளியான இவருக்கு நிரோஷா (20) என்கிற மகள் உள்ளார். இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நாள்தோறும் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து கல்லூரிக்கு மின்சார ரயிலில் வழக்கமாக சென்று வந்துள்ளார்.

மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை:

இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா.. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை கடிதம்:

இது குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் நிரோஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிரோஷாவின் பையில் தற்கொலைக்கான கடிதம் இருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.