துப்பாக்கியால் தன்னைத் தானே மாய்த்துக்கொண்ட பிரபல தொழிலதிபர்...!

கிருஷ்ணகிரியில் பிரபல தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அப்பகுதியில் பிரபல நகைக்கடை, வணிக வளாகம் நடத்தி வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதுடன், வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல மனைவி மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக உரையாடிய பிறகு தனது அறையில் உறங்க சென்றுள்ளார். 

இதையும் படிக்க : மிசோரம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

இன்று காலை திடீரென அவரது அறையில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதை அடுத்து, உறவினர்கள் சென்று பார்த்தப் போது, சுரேஷ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகலவறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை அல்லது கடன் பிரச்னையால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

தொழிலதிபரும், அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் நகர தலைவருமான சுரேஷ் இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக, கிருஷ்ணகிரி நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.