காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட ஆண் சடலம்...!

திருப்பூர் அருகே காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் உடல் பிணமாக மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட ஆண் சடலம்...!

திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அருகே உள்ள பொங்குபாளையம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அந்த பகுதிக்கு சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், கொலை செய்யப்பட்ட நபர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் கமிஷனர் பிரபாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தபட்டுள்ளது.