என்ன நடக்குது?.. சிசிடிவி கேமராவால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்... மாஸ் காட்ட நினைத்த மர்ம கும்பல்.. ஜூஸ் புளிந்த காவல் துறை!!

புதுச்சேரியில் அழகு நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

என்ன நடக்குது?.. சிசிடிவி கேமராவால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்... மாஸ் காட்ட நினைத்த மர்ம கும்பல்.. ஜூஸ் புளிந்த காவல் துறை!!

புதுச்சேரி அழகு நிலையம்:

புதுச்சேரி சங்கரதாஸ் வீதியில் விஜயலட்சுமி என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருடன் நான்கு பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

சிசிடிவி கேமராவால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி:

கடந்த ஜூன் ஆறாம் தேதி மாலை விஜயலட்சுமி அழகு நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். சிறிது நேரத்திற்கு பினனர் அவர் அங்கு பணியில் இருந்த ஊழியரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் எடுக்கப்படவில்லை. உடனே விஜயலட்சுமி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை தனது செல்போன் மூலம் பார்த்தார். அப்போது அழகுநிலையம் உள்பக்கமாக மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மர்ம கும்பல்:

அதிர்ச்சியடைந்த அவர் அங்கு விரைந்து சென்று கதவை தட்டினார். அப்போது அழகுநிலையத்தில் உள்ளே இருந்த 7 பேர் அவரையும் உள்ளே இழுத்து கதவை மூடினர்.  பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 81 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் 4 கிராம் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

வழக்கு பதிவு:

இதுகுறித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கிருஷ்ணகுமார், பாலமுருகன், விஜய் உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் இரண்டு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.