4 வருடங்களாக - 4 வயதிலிருந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பக்கத்துவீட்டு வாலிபர் கைது!!
கேரளாவில் சிறுமியை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வரும் பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தங்கமணி பகுதியை சேர்ந்தவர் சோஜன். இவர் கடந்த 4 வருடங்களாக தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் சிறுமி படிக்கும் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் பாலியல் ரீதியான விழிப்புணர்வு முகாம் நடத்தி வந்துள்ளனர்.
அப்போது, பாலியல் ரீதியான கொடுமை பற்றி அறியாத அந்த சிறுமி இந்த விழிப்புணர்விற்கு பிறகு அந்த அமைப்பினரிடம் பக்கத்துவீட்டு வாலிபர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்த கொடுமையை சரிவர சொல்லக்கூட தெரியாமல் பாதிப்பை விளக்கினார்.
இதையடுத்து, குழந்தை நல அமைப்பினர் இது குறித்து தொடுபுழா போலீசில் புகார் செய்தனர். போலீசார் பாலியல் பலாத்காரம் செய்து வரும் பக்கத்து வீட்டு வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடுபுழா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 50 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.