ஒரு கோடி அப்பு... கமிஷனுக்கு ஆசை பட்டு பணத்தை இழந்த நபர்!

ஒரு கோடி அப்பு... கமிஷனுக்கு ஆசை பட்டு பணத்தை இழந்த நபர்!

திண்டுக்கல் அருகே  2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன் தருவதாக கூறி காா் மற்றும் பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

கரூர் மாவட்டம் ஆண்டாள் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு எரியோடு அருகே கொண்டம நாயக்கனூரில் தோட்டம் உள்ளது.

இவரின் நண்பர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாஜகான். இந்த நிலையில் சக்திவேல், ஷாஜகானிடம் என்னிடம் 2000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடிக்கு உள்ளது. அதனை மாற்றி கொடுத்தால் கமிஷன் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து ஷாஜகான் தனது நண்பர்களான குணசேகரன் மற்றும் ராஜசேகரிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும் இதற்கு சரி என்று சொல்லி, ஒரு கோடி கொடுத்தால் 90 லட்ச ரூபாய்க்கு 500 ரூபாய் நோட்டுகள் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

அதற்கு சக்திவேல் ஒப்புக்கொண்டு, தன்னுடைய தோட்டத்தில் வைத்து பணத்தை மாற்றி விடலாம் என்று அவர்களிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து குணசேகர், ராஜசேகர் மற்றும் ஷாஜகான் ஆகிய மூன்று பேரும் பணத்துடன் சக்திவேலின் தோட்டத்திற்கு ஒரு காரில் வந்துள்ளனர்.

இந்நிலையில், சக்திவேல் தனது கூட்டாளிகள் 9 பேருடன் சேர்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி, 90 லட்சத்தை பறித்துக் கொண்டு அவர்களுடைய காரிலேயே தப்பியுள்ளனர்.

சிறிதுதூரம் சென்று அந்த காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு தாங்கள் வந்த காரில் சக்திவேல் தரப்பினர் தப்பியுள்ளனர். இதுகுறித்து எரியோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான தனிப்படை போலீசார் தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனர்.

10 லட்சம் கமிஷனுக்கு ஆசைப்பட்டு 90 லட்சத்தை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நீலகிரியில் சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கா. ராமச்சந்திரன்!