பாதாள அறையில் நிர்வாணமாக கிடந்த பெண்!!ஆன்லைன் காதலால் நேர்ந்த விபரீதம்...

அமெரிக்காவில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளம்பெண் ஆண் நண்பர் வீட்டில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதாள அறையில் நிர்வாணமாக கிடந்த பெண்!!ஆன்லைன் காதலால் நேர்ந்த விபரீதம்...

அமெரிக்காவைச் சேர்ந்தவர் தான் மடைலின். பள்ளி மாணவியான இவர் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில்  போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அதில், கடைசியாக மடைலின்  டிசம்பர் 13-ம் தேதி அன்று தங்குமிடம் ஒன்றில் சிசிடிவியில் பதிவாகியுள்ளார்.   அதற்கு பிறகு தான் மடைலின் காணாவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த டிசம்பர் 14ம் தேதி மடைலின் செல்போனில் இருந்து குடும்ப உறுப்பினர்களுக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் "நான் உங்களை நேசிக்கிறேன் " என்று எழுதப்பட்டிருந்தது. 

அதன்பின்னர் அந்த செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதை அறிந்த போலீசார் செல்போன் டவரை ஆராய்ந்து கடைசியாக அது உபயோகப்படுத்தப்பட்ட பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி சரியான இடத்தை கண்டுபிடித்து பிரவுன் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். 

அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியபோது  அந்த வீட்டில் தான் மட்டுமே இருப்பதாக அந்த இளைஞர் கூறியுள்ளார். ஆனால், வீட்டின் அருகே மடைலினின் ஐடி கார்டு கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து ப்ரவுனின் வீட்டை சோதனையிட்ட போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த வீட்டில் உள்ள பாதாள அறையில் நிர்வாணமாக மடைலின் கிடந்துள்ளார்.  உடனடியாக மடைலினை மீட்ட போலீசார் ப்ரவுனிடம் விசாரணை நடத்தினர்.  

விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. பிரவுனும், மடைலினும் சேட்டிங் செயலி ஒன்றில் நண்பர்களாகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் சந்தித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். தன்னுடைய வீட்டுக்கு மடைலினை அழைத்த ப்ரவுன், அவரிடம் உடலுறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். மடைலின் முடியாது என மறுக்கவே அவரை பல்வேறு விதங்களில் மிரட்டி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். மடைலின் செல்போனையும் பறித்துள்ளார். அதற்கு முன்பாகவே குடும்பத்தினருக்கு  "நான் உங்களை நேசிக்கிறேன் "  என மடைலின் மெசேஜ் அனுப்பியுள்ளார். 

இதனையடுத்து, ஆதாரங்களை கொண்டு பிரவுன் மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளை பதிவுசெய்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வரும் நிலையில் அறிமுகம் இல்லாதவர் வீட்டுக்கு மடைலின் தனியாக சென்றதே குற்றவாளிக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேற்கொண்டு போலீசார்  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.