மளிகை கடையில் ஒரு டன் போதை பொருட்கள்..! பறிமுதல் செய்த அதிகாரிகள்...!

மளிகை கடையில் ஒரு டன் போதை பொருட்கள்..!  பறிமுதல் செய்த அதிகாரிகள்...!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் சுமார் ஒரு டன் எடையுள்ள போதை பொருட்கள் வைத்திருந்த உரிமையாளர் மற்றும் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள வேல்முருகன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மளிகை பொருள் வைக்கும் குடோனில் போதைப்பொருள் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் பெருந்துறை உதவி கண்காணிப்பாளர் கவுதம் கோயல் தலைமையிலான போலீசார் சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள மளிகை கடை மற்றும் இளங்கோ தெருவில் உள்ள குடோனில் ஆய்வு செய்தபோது குடோனில் இருந்து சுமார் ஒரு டன் எடையுள்ள குட்கா மற்றும் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மளிகை கடை உரிமையாளர் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து சிவகிரி காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர், இது சம்பந்தமாக கடை உரிமையாளர் வேல்முருகன் மற்றும் டிரைவர் தங்கராஜ் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.  மேலும் போதை பொருட்கள் கடத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க : கடல் அலையில் சிக்கிய வடமாநில இளைஞர்...!