வீட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் உடல் சிதறி பலியான பெண் !! வீட்டில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதா...? விசாரணையில் போலீசார்

மதுரை மாவட்டத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் உடல் சிதறி பலியான பெண் !! வீட்டில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதா...?  விசாரணையில் போலீசார்

உசிலம்பட்டி அருகே உள்ள நல்லி வீரன் பட்டி பகுதியின் ஒரு வீட்டில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த வெடி விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் குழந்தை உள்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வெடி விபத்தால் அருகில் இருந்த வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளரை கைது செய்த போலீசார் வீட்டில் வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டதா என்பது குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.