மயிலை சித்ரவதை செய்து வீடியோ வெளியிட்ட இளைஞன்...வலைவீசி தேடும் போலீசார்!

மயிலை சித்ரவதை செய்து வீடியோ வெளியிட்ட இளைஞன்...வலைவீசி தேடும் போலீசார்!

மத்தியப்பிரதேசத்தில் மயிலின் இறகைப் பிடுங்கி எடுத்து சித்ரவதை செய்து வீடியோ வெளியிட்ட இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர். 

மத்திய பிரதேசம் கட்னி பகுதியைச் சேர்ந்த அதுல் என்ற இளைஞர் தனது நண்பனுடன் இணைந்து மயிலை கொடுமைப்படுத்தி அதனை பாடலுடன் இணையத்தில் வெளியிட்டார்.

இதையும் படிக்க : 4 மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் கட்சி மேலிடம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்...!

இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகவே, ரீத்தி பகுதி போலீசார் மயிலை கொடுமைப்படுத்தி வீடியோ வெளியிட்ட அந்நபரைக் தேடிய நிலையில், அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.