காதலன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!!

சிக்கமகளூரு அருகே காதலன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் இறந்த அதிர்ச்சியில் இளம்பெண் தூக்கிட்டு  தற்கொலை!!

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம்  மக்கிமனே கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரும், வடரேஹள்ளி கிராமத்தை சேர்ந்த சாந்தினி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டார் குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. ஆனால், இரு வீட்டார் பெற்றோர்களும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டனர். இதனால் காதல் ஜோடிகள் இருவரும் மனமுடைந்து விட்டனர்.

இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி ஆழ்ந்த மன உடைச்சலில் இருந்த ராஜேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து காதலன் ராஜேஷ் உயிரிழந்த செய்தியை கேட்ட இளம்பெண் சாந்தினி அதிர்ச்சியடைந்தார். தன் காதலன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாத இளம்பெண் சாந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காதலன் இறந்த அதிர்ச்சியில் சாந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.