மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 17 வயது சிறுமியை 2வது திருமணம் செய்த வாலிபர் கைது...

மதுரையில் 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, 2வதாக திருமணம் செய்துள்ளார் 27 வயது வாலிபரை தற்போது அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 17 வயது சிறுமியை 2வது திருமணம் செய்த வாலிபர் கைது...

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞர் மகாலிங்கம். இவர் சுற்று வட்டாரப்பகுதிகளில் திருவிழாக்களுக்கு ரேடியோ செட் அமைக்கும் வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார் மகாலிங்கம், இதனை அவனது பெற்றோர் மகாலிங்கத்திற்கு உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

 திருமண ஆன பிறகும் சிறுமியுடன் அடிக்கடி செல்போனில் பேசியதால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றுவிட்டது.இந்நிலையில் தான் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வர சிறுமியை மதுரை மேல அனுப்பானடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு பெற்றோர் கடந்த மாதம் அனுப்பி வைத்துவிட்டனர்.

 இந்த நிலையில் சிறுமியின் மனதை மாற்றி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மகாலிங்கம் சிறுமியை தெப்பக்குளம் பகுதிக்கு வரவைத்து சிறுமிக்கு தாலிகட்டியுள்ளார். தேவகோட்டை அருகே வீடு எடுத்து தங்கியிருந்துள்ளனர். இதையறிந்ததும், இளைஞரின் உறவினர்கள் தெப்பக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், தேவகோட்டை அருகே சிறுமியுடன் தங்கியிருந்த மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்து மதுரை அழைத்து வந்துள்ளனர்.