அமைச்சர் துரைமுருகனுக்கு பேஸ்புக்கில் சமாதி...!  அதிமுக நபர் கைது...!!

அமைச்சர் துரைமுருகனுக்கு பேஸ்புக்கில் சமாதி...!  அதிமுக நபர் கைது...!!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் புகைபடம் பதிவேற்றம் செய்த அதிமுக நபரை காட்பாடி போலிசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி நகர 20 வார்டு தொழிநுட்ப அணி  செயலாளராக இருந்து வருபவர் அருண்குமார். இவர் கடந்த மார்ச் 28 ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தமிழநாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  சமாதியை போல் உருவம் வரைந்து "அதில் இங்கே கோபாலபுரத்து கொத்தடிமை உறங்குகிறான்" என்ற வாசகத்தை எழுதி வைரலாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து காட்பாடி திமுக பகுதி செயலாளர் வன்னிய ராஜா என்பவர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டனர். இந்த முகநூல் பதிவு சம்பந்தப்பட்ட அருண்குமார் பொள்ளாச்சியில் இருப்பது தெரியவந்தது.

இது சம்பந்தமாக காட்பாடி காவல் நிலையதில்  வழக்கு பதிவு செய்து நேற்று பொள்ளாச்சியில் இருந்த அருண்குமாரை காட்பாடி ஆய்வாளர் தமிழ்செல்வன் தலைமையில் போலீசார் கைது செய்து காட்பாடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரை நீதிமன்ற  நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக காவல் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல  முற்பட்டபோது அவரிடம் பேச வேண்டும் என்று வேலூர் மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு தலைமையில் அதிமுகவினர் திரண்டு வந்தனர். 

இது குறித்து மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே அப்பு கூறும் பொழுது "அந்த முகநூல் பதிவை முதன் முதலில் பதிவிட்டவர் திமுக ஐடி விங் சேர்ந்த குடியாத்தம், ராஜாகுப்பம், முருகானந்தம்தான் முதன் முதலில் இந்த பதிவை பதிவேற்றம் செய்திருக்கிறார்.  இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அவரை கட்சியை விட்டு நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனே அறிக்கை விட்டுள்ளார். அப்படி இருக்கும்போது அவருக்கு வந்த பார்வர்ட் மெசேஜை பார்வேர்ட் செய்த அருண்குமார் மீது மட்டும் வழக்கு செய்வது திமுக-வின் பாரபட்ச செயலாகவே பார்க்கப்படுகிறது.. அருண்குமாரை  விடுதலை செய்ய வேண்டும்" என்று காட்பாடி டிஎஸ்பி பழனியிடம் கேட்டிருக்கிறோம் என்று கூறினார்.

சில நாட்களுக்கு முன்பாக மானிய கோரிக்கையின் போது நீர்வளத்துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சர்  துரைமுருகன் சட்டமன்றத்தில் உரையாற்றும்போது தனக்கென ஒரு ஒரு குழியை தோண்டும் பொழுது அந்த குழியில்  என்ன வைத்து மூடியை பிறகு அப்படியே கோபாலபுரத்து விசுவாசி உறங்குகிறான் என்று ஒரே ஒரு வாசகம் மட்டும் எழுதுங்கள் போதும் என்று அனைவரையும் மனமுருகப் பேசி மெய்சிலிர்க்க வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.