அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல்....! சிசிடிவியில் பதிவான காட்சிகள் ...!

தூத்துக்குடியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்...

அதிமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தாக்குதல்....! சிசிடிவியில் பதிவான காட்சிகள் ...!

தூத்துக்குடி மாவட்டம் டுவிபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், அவரது உறவினர் லட்சுமணன் வீடுகளில் நேற்று நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி டுவிபுரம் மூன்றாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுக நயினார். இவர் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் தற்போது அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில இணைச்செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவு இருசக்கர வானத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அதே தெருவில், இவரது சகோதரர் ராமசாமியின் மகன் லட்சுமணனின் வீடு உள்ளது. அந்த மர்மநபர்கள் லட்சுமணன் என்பவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

 அப்போது, பெட்ரோல் குண்டு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மேல்பட்டு, லேசாக தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும், வீட்டின்  வெளியே கையெறி குண்டின் திரிகள் சிதறிக்கிடந்துள்ளது. இது குறித்த தகவல் வெளியானதும் சம்பவ இடத்திற்கு, மத்திய பாகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பெட்ரோல் குண்டு வீசி இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து மத்திய பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான அதிமுக பிரமுகர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.