டியூசன் வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்!! குண்டர் சட்டத்தில் அதிரடியாக கைது
டியூசன் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை குண்டர் சட்டத்தில் அடைக்க அதிரடி உத்தரவு...
டியூசன் வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கு மாவட்ட கலெக்டர்
அதிரடியாக உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு டியூசன் சென்டர் நடத்தி வந்துள்ளார் ஆசிரியர் லோகநாதன். இவரிடம் டியூசன் படிப்பதற்காக பத்தாம் வகுப்பு மாணவி சேர்ந்துள்ளார்.
அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட லோகநாதன் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கர்ப்பமாக்கியுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் துறையிடம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் கீழ் ஆசிரியர் லோகநாதனை கைது செய்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல்துறையின் கண்காணிப்பாளர் சசி மோகன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் கிருஷ்னுண்ணி ஆசிரியர் லோகநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது.