பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்!! சிவகங்கையில் பரபரப்பு

முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

பத்திரப் பதிவு அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர்!! சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கையில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் முதியவர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்புவனம் அருகேயுள்ள மேலராங்கியத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது சகோதரர்களான பெரியசாமி, பால்சாமி இருவரும் இணைந்து மூவருக்கும் சொந்தமான நிலத்தை இவர்கள் இருவரின் பெயருக்கு மட்டும் பத்திர பதிவு செய்ய முயன்றுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்ற பொன்னுச்சாமி தீக்குளிக்க முயன்றுள்ளார். அவரை 50 சதவீத தீக்காயங்களுடன் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.