பள்ளி மாணவியை கடத்த முயற்சி... தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது...

ஊத்துமலை அருகே பள்ளி மாணவியை காரில் கடத்த முயன்ற திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவியை கடத்த முயற்சி... தி.மு.க. பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது...

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள பலபத்திரராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புதிய கண்ணு மகன் முத்துசாமி(33) தெற்குமாவிலியூத்து கிராமத்தில் தனது சொந்தக் காரில் அவர் செல்லும்போது, அவ்வழியே நடந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை லிப்ட் கொடுப்பது போல் காரில் ஏற்றி ஊரில் இறக்கி விடாமல் அருகில் உள்ள வனப்பகுதிக்குள்கடத்த முயன்றாராம்.

இதில் மாணவி சத்தமிட்டதால் அருகில் உள்ளவர்கள் முத்துசாமியை தர்ம அடி கொடுத்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினர். சின்ன கோவிலாங்குளம் காவல் துறையினர் ஊத்துமலை காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து முத்துசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.