சென்னையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியிலிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஜரூர் தாலுக்காவை சேர்ந்தவர் வேலுச்சாமி (24). இவர் ஆயுதப்படை காவலராக பணிப்புரிந்து வருகிறார். கலைவாணர் அரங்கில் சட்டசபை நடந்து வருவதால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வாலாஜா சாலையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கி வருகின்றனர். இதனால் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் காவலர் வேலுச்சாமியை பாதுகாப்பு பணி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று இரவு 8.15 மணியளவில் பாதுகாப்பு பணியில் இருந்த வேலுசாமி திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் தொண்டை குழியில் சுட்டு கொண்டார். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அருகிலிருந்த  காவலர்கள் ஓடி வந்து பார்த்தபோது படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலுசாமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தாடைப் பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் காவலர் வேலுச்சாமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவலர் வேலுச்சாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.