வாழைத்தோப்பில் கிடந்த ஆட்டோ டிரைவர் சடலம்...நடந்தது என்ன? போலீசார் விசாரணை!

வாழைத்தோப்பில் கிடந்த ஆட்டோ டிரைவர் சடலம்...நடந்தது என்ன? போலீசார் விசாரணை!

கடலூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் அடுத்த குறவம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் சிவமணி. ஆட்டோ ஓட்டுனரான இவர் திடீரென்று காணாமல் போனதால் உறவினர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வாழை தோப்பில் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் கண்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

இதையும் படிக்க: எல்லாரும் ஊருக்கு கிளம்ப தயாரா? விட்டாச்சு ஸ்பெஷல் பஸ்!

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சிவமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுத்தறுக்கப்பட்டு வாழைத்தோப்பில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநரின் கொலை சம்பவம் குறித்து திருப்பாதிரிப்புலியிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்