பா.ஜ.க. பிரமுகரை கடத்திய மர்ம கும்பல்... 8 பேர் கொண்ட கும்பல் போலீசாரால் கைது...

சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பாஜக  பிரமுகரை. காவல் நிலையத்துக்கு வெளியே வைத்து கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

பா.ஜ.க. பிரமுகரை கடத்திய மர்ம கும்பல்... 8 பேர் கொண்ட கும்பல்  போலீசாரால் கைது...

ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற வேட்பாளராக கடந்த 2016 ஆம் ஆண்டு  பாஜக சார்பில் போட்டியிட்டவர் நாகராஜ். இவர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் சாஸ்திரிநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 

சிறையிலிருந்து நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்த இவர் தினந்தோறும் சென்னை, சாஸ்திரி நகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.  இந்தநிலையில் நேற்று காலை 10 மணி அளவில் சாஸ்திரிநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு வெளியே வந்த அவரை மர்ம கும்பல் கடத்தி சென்றது.  

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாறு போலீசார் நாகராஜை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்று போரூரில் உள்ள ஒரு ஜிம்மில் வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 8 பேரையும் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.