பெண்களிடம் சில்மிஷம்... மாவட்ட தலைவர் உட்பட 5 பேரை நீக்கிய பாஜக தலைமை!!

பெண்களிடம் சில்மிஷம்... மாவட்ட தலைவர் உட்பட 5 பேரை நீக்கிய பாஜக தலைமை!!

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தலைவர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.  

இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அண்ணாமலை, குழு அமைத்து உத்தரவிட்ட நிலையில், அந்த குழு அளித்த அறிக்கையின் படி, திருவள்ளூர் கிழக்கு பாஜக மாவட்ட தலைவர் செந்தில் குமார், கிழக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் பொன் பாஸ்கர், கிழக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் முத்துராஜா உள்ளிட்ட 5 பேரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். 

இதனால், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க || "பொது கூட்டத்தின் மேல் கண் பட்டதால் தான் மழை வந்துவிட்டது " ஓபிஎஸ் புலம்பல்!!