கடன் திருப்பித் தராததால் வெட்டிக் கொலை! பரபர சிசிடிவி வெளியீடு!

கல்புர்கி மாவட்டத்தில் 9000 கடன் பணத்தை திருப்பிக் கொடுக்காததால் இளைஞர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் குறித்த பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கடன் திருப்பித் தராததால் வெட்டிக் கொலை! பரபர சிசிடிவி வெளியீடு!

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள ஜவர்கி என்ற பகுதியை சேர்ந்த சமீர் என்ற 23 வயதான இளைஞனை அதே பகுதியை சேர்ந்த ஜபீர் மற்றும் ஆகாஷ் என்ற இரு நபர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சமீர் கொலையாளிகள் இருவரிடமிருந்து 9 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெற்றுள்ளார். இந்த பணத்தை திரும்ப பெற பலமுறை கேட்டபோது பணத்தை தர முடியாது என அடாவடியாகவும் பதில் கூறியுள்ளார்.

கோபமடைந்த இருவரும் சமீரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்தனர். இருவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.