தண்டவாளத்தில் கிடந்த 14 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள்... காவல்துறையினர் விசாரணை...

கொருக்குப்பேட்டை  ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 14 கிலோ கஞ்சா பையை வீசி சென்றவர் யார்? என  ரயில்வே காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் கிடந்த 14 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள்... காவல்துறையினர் விசாரணை...

சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் கொருக்குப்பேட்டையிலிருந்து சென்னை சென்ட்ரல்  செல்லும் ரயில்களில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது   தண்டவாளம் அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. உடனடியாக பையை சோதனை செய்ததில் தலா 2 கிலோ வீதம் 7 பாக்கெட் மொத்தம் 14 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்து.

அதனை கைப்பற்றிய கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறையினர் மாநில போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் தகவல் கொடுத்து ஒப்படைத்தனர். மேலும் 14 கிலோ கஞ்சா பொட்டலங்களை வீசி சென்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.